கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரான ஜோஷி கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜோஜு ஜார்ஜ் நடித்த 'அந்தோணி' என்ற படத்தை இயக்கினார். இப்போது அவர் உன்னி முகுந்தனுடன் பான் இந்தியா படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை உன்னி முகுந்தன் பிலிம்ஸ், ஜன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து தயாரிக்கிறது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "தேசிய விருது வென்ற 'மேப்படியான்' மற்றும் 100 கோடி வசூலித்த ஆக்ஷன் திரைப்படமான 'மார்கோ' படங்களை தொடர்ந்து உன்னி முகுந்தன் பிலிம்ஸ் தற்போது இயக்குநர் ஜோஷியுடன் இணைகிறது.
'பொரிஞ்சு மரியம் ஜோஷ்', 'கிங் ஆப் கோதா' போன்ற படங்களில் திரைக்கதைக்காக அறியப்பட்ட எழுத்தாளர், இயக்குநர் அபிலாஷ் என்.சந்திரன், இயக்குநர் ஜோஷியுடன் இந்தப் படத்தில் இணைகிறார்.
இதன் மூலம் இயக்குநர் ஜோஷியின் புதிய படம் வெறும் ஆக்ஷன் மட்டுமல்லாது ஆழமான எமோஷன், மறக்க முடியாத தருணங்களையும் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுக்கிறது. இதற்கு முன்பு பார்த்திராத வகையில் உன்னி முகுந்தன் ஆக்ஷன் அவதாரத்தில் நடிக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது.