வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

இந்தியாவின் முதல் பார்முலா 1 மோட்டார் பந்தய வீரரான கோயம்பத்தூரைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் படம் உருவாக உள்ளது. தமிழில் உருவாக உள்ள இந்தப் படத்தை 'டேக் ஆப், மாலிக்' ஆகிய படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார். 'சூரரைப் போற்று' படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதிய ஷாலினி உஷாதேவி இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதுகிறார்.
நரேனின் சிறு வயது முதல் அவரது படிப்படியான வளர்ச்சியைச் சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்பட உள்ளதாம். இந்த பயோபிக் படம் குறித்து நரேன் கார்த்திகேயனும் அவரது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளாராம். 'என்கே 370' என்ற தற்காலிக தலைப்புடன் இந்தப் படத்தை ஆரம்பிக்க உள்ளார்கள்.
“நரேன் கார்த்திகேயன், பயணம் என்பது ரேஸிங் மட்டுமல்ல. அது நம்பிக்கையைப் பற்றியது. உங்களை நீங்களே, உங்கள் நாட்டைப் பற்றியும், மற்றும் வேறு யாராலும் காண முடியாத ஒரு கனவு. அதுதான் என்னை இந்த கதைக்குள் இழுத்து வந்தது,” என படம் பற்றி இயக்குனர் மகேஷ் தெரிவித்துள்ளார்.