ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

சென்னை வைஷ்ணவா கல்லூரி மாணவியான பவ்யா திரிகா 'கதிர்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ரியோ ராஜ் ஜோடியாக நடித்த 'ஜோ' படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது வெளியாகி உள்ள 'பன் பட்டர் ஜாம்' படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "பன் பட்டர் ஜாம் படத்தில் நான் நடித்திருந்த நந்தினி கேரக்டர் ரசிகர்களையும், விமர்சகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இன்றைய இளம் பெண்களை அந்த கேரக்டர் பிரதிபலித்ததே அதற்கு காரணம். இதற்கு முன் பல வாய்ப்புகள் வந்தபோதும் அதனை தவிர்த்தேன். வழக்கமான, ஜீவன் இல்லாத ஹீரோயின் கதாபாத்திரங்களைத் தவிர்த்து, உண்மையான நடிப்பு திறமை வெளிப்படும் கதாபாத்திரத்திற்காக காத்திருந்தேன். அதனால் சிறு இடைவெளியும் ஏற்பட்டது" என்றார்.