தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ஸ்ரீ லீலா, தற்போது தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‛பராசக்தி' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் ‛ஆஷிகி -3' என்ற படத்தில் கார்த்திக் ஆரியனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
இந்தநிலையில் தற்போது பாலிவுட் ஊடகங்களில் கார்த்திக் ஆரியனும், ஸ்ரீலீலாவும் காதலிப்பதாக ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து உடனடியாக அதற்கு ஒரு மறுப்பு தெரிவித்திருக்கிறார் ஸ்ரீ லீலா. அவர் கூறுகையில், ‛‛என்னை பற்றி வெளியாகும் காதல் செய்தி முற்றிலும் வதந்தியாகும். சினிமாவை மட்டுமே நான் காதலித்து வருகிறேன். அதோடு நான் படப்பிடிப்புக்கு செல்லும் ஒவ்வொரு நாளும் என்னுடைய தாயார் என்னுடன்தான் இருப்பார். அப்படி இருக்கும்போது நான் எப்படி காதலிக்க முடியும். அதனால் இதுபோன்ற செய்தியை யாரும் நம்பவேண்டாம். மேலும் சினிமாவில் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு மேல் நடிக்க ஆசைப்படுகிறேன். அதனால் இது போன்று வதந்திகளை பரப்பி என் மார்க்கெட்டை சரித்து விடாதீர்கள்'' என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்ரீ லீலா.