வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

எட்டுத்தோட்டாக்கள், ஜீவி, வனம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வெற்றி. இவர் நடிப்பில் அனிஸ் அஷ்ரப் இயக்கத்தில் கிரைம் திரில்லராக வர உள்ள படம் 'சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்'. ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் தான் இந்த இயக்குனர். நீங்க தொடர்ச்சியாக இப்படிப்பட்ட திரில்லர் கதைகளில் நடிப்பது ஏன் என்று வெற்றியிடம் நிருபர்கள் கேட்க, 'நான் கலர்புல் கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு இப்படிப்பட்ட கதைகள் அதிகம் வருகிறது. இப்போது சினிமாவை பொறுத்தவரையில் கருதான் முக்கியம். அது நல்லா இருந்தால், எந்த படமும் ஓடும்.
இயக்குனர் அனிஸ் இயக்கிய குறும்படத்தை பார்த்தேன். அதிலிருந்து நம்பிக்கை பிறந்தது. நீண்ட நாட்களுக்குப்பிறகு உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறோம். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.'' என்றார்.
இதில், ‛இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், காளி' படங்களில் ஹீரோயினாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் ஹீரோயின். அவர் கதைப்படி பத்திரிகையாளராக வருகிறார். சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் மகேஸ்வரன் தேவதாஜ் வில்லனாக நடித்து, படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் எடிட்டிங் பணிகள் மட்டுமே ஓராண்டு நடந்ததாம்.