தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணனான சத்ய நாராயணா, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் சுப்பிரமணிசாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் வெற்றி பெறுவாரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய் அரசியலில் வெற்றி பெறுவது ரொம்ப கஷ்டம் என்று கூறியுள்ளார்.
மேலும், பாஜகவின் அண்ணாமலை ஒரு புத்திசாலி. அவர் அரசியலில் நன்றாக வருவார். தமிழக அரசியலில் மிகப்பெரிய இலக்கை அடைவார் என்று கூறியிருக்கிறார். அதையடுத்து, கமல்ஹாசன் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ரஜினி எம்.பி ஆவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, ரஜினிக்கு அதெல்லாம் தேவையில்லை. அவருக்கு கவர்னர் பொறுப்பே வந்தது. அதையே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவர் அரசியலில் பதவி வகிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்திருக்கிறார் சத்ய நாராயணா.
நடிகர் விஜய் அரசியலில் வெற்றி பெறுவது ரொம்ப கடினம். ஆனால் பாஜகவின் அண்ணாமலை புத்திசாலி. அரசியலில் பெரிய இலக்கை அடைவார் என்று அவர் சொன்ன பதில் சோசியல் மீடியாவில் கடுமையாக விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.