பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? |
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணனான சத்ய நாராயணா, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் சுப்பிரமணிசாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் வெற்றி பெறுவாரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய் அரசியலில் வெற்றி பெறுவது ரொம்ப கஷ்டம் என்று கூறியுள்ளார்.
மேலும், பாஜகவின் அண்ணாமலை ஒரு புத்திசாலி. அவர் அரசியலில் நன்றாக வருவார். தமிழக அரசியலில் மிகப்பெரிய இலக்கை அடைவார் என்று கூறியிருக்கிறார். அதையடுத்து, கமல்ஹாசன் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ரஜினி எம்.பி ஆவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, ரஜினிக்கு அதெல்லாம் தேவையில்லை. அவருக்கு கவர்னர் பொறுப்பே வந்தது. அதையே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவர் அரசியலில் பதவி வகிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்திருக்கிறார் சத்ய நாராயணா.
நடிகர் விஜய் அரசியலில் வெற்றி பெறுவது ரொம்ப கடினம். ஆனால் பாஜகவின் அண்ணாமலை புத்திசாலி. அரசியலில் பெரிய இலக்கை அடைவார் என்று அவர் சொன்ன பதில் சோசியல் மீடியாவில் கடுமையாக விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.