வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா. அவரை இசையமைப்பாளர் ஆக்கியவர் மறைந்த தயாரிப்பாளர், கதாசிரியர் பஞ்சு அருணாசலம். ராஜ்கிரண் நடித்த 'மாணிக்கம்' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜா, 'அரவிந்தன்' படத்தின் யுவன் சங்கர் ராஜாவை இசையமைப்பாளர் ஆக்கியவர் தயாரிப்பாளர் டி.சிவா.
இப்போது கார்த்திக்ராஜா மகன் யத்தீஸ்வர் பக்தி பாடல் இசையமைத்து விட்டார். சினிமாவுக்கு இசையமைக்க ரெடி என்கிறார். அவரை யார் இசையமைப்பாளர் ஆக்கப்போகிறார்கள்? ராஜாவின் பேரன் எப்போது சினிமாவில் என்ட்ரி ஆகப்போகிறார்? என்ற கேள்வி எதிர்பார்ப்புடன் கேட்கப்படுகிறது. இளையராஜா குடும்பத்தில் மறைந்த பவதாரினி, நடிகர் பிரேம்ஜி அமரன் ஆகியோரும் இசையமைப்பாளர்களே. இந்தியளவில் அதிக இசையமைப்பாளர்களை கொண்ட குடும்பம் என்ற பெருமை ராஜாவுக்கு உண்டு.