பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? |
'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா. அவரை இசையமைப்பாளர் ஆக்கியவர் மறைந்த தயாரிப்பாளர், கதாசிரியர் பஞ்சு அருணாசலம். ராஜ்கிரண் நடித்த 'மாணிக்கம்' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜா, 'அரவிந்தன்' படத்தின் யுவன் சங்கர் ராஜாவை இசையமைப்பாளர் ஆக்கியவர் தயாரிப்பாளர் டி.சிவா.
இப்போது கார்த்திக்ராஜா மகன் யத்தீஸ்வர் பக்தி பாடல் இசையமைத்து விட்டார். சினிமாவுக்கு இசையமைக்க ரெடி என்கிறார். அவரை யார் இசையமைப்பாளர் ஆக்கப்போகிறார்கள்? ராஜாவின் பேரன் எப்போது சினிமாவில் என்ட்ரி ஆகப்போகிறார்? என்ற கேள்வி எதிர்பார்ப்புடன் கேட்கப்படுகிறது. இளையராஜா குடும்பத்தில் மறைந்த பவதாரினி, நடிகர் பிரேம்ஜி அமரன் ஆகியோரும் இசையமைப்பாளர்களே. இந்தியளவில் அதிக இசையமைப்பாளர்களை கொண்ட குடும்பம் என்ற பெருமை ராஜாவுக்கு உண்டு.