வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'கருப்பு'. இன்று (ஜூலை 23) சூர்யாவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதற்காக நேற்று இரவு படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டார்கள். அதில் 'சுருட்டு' பிடித்துக் கொண்டு சூர்யா நடக்க, சுற்றிலும் கிராமத்து தெய்வங்களின் தோற்றத்தில் கையில் அரிவாளுடன் சிலர் நின்றிருக்கும் வகையிலான போஸ்டர் டிசைன் இடம் பெற்றுள்ளது. இப்படத்தை கிராமத்துத் தெய்வங்களின் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கி வருவதாகச் சொல்கிறார்கள்.
இருந்தாலும் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் இடம் பெற்றால் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறும் விதத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த பல வருடங்களாகவே நடவடிக்கை எடுத்து வருகிறது.
சினிமாவில் அதிகமான புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்த ரஜினிகாந்த் கூட அம்மாதிரியான காட்சிகளில் நடிப்பதைத் தவிர்த்துவிட்டார். இடையில் 'ஜெயிலர்' படத்தில் அப்படி ஒரு காட்சி வந்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியது. விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தில் 'நான் ரெடிதான்' பாடலில் விஜய் புகை பிடித்தபடியே நடனமாடியதும், பாடலில் மது அருந்துவது குறித்த வரிகள் இடம் பெற்றதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தனுஷும் அவரது பட போஸ்டர்களில் புகை பிடிப்பதை வைத்து வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
சமூக அக்கறை கொண்ட ஒருவராக தன்னை காட்டிக் கொள்பவர் சூர்யா. அவரது மனைவி ஜோதிகா சில வருடங்களுக்கு முன்பு கோவில்களையும், மருத்துவமனைகளையும் ஒப்பிட்டுப் பேசியதும் சர்ச்சை ஆனது. அதன்பின் சூர்யா, ஜோதிகா இருவரும் தங்களது பக்தியை வெளிப்படுத்தும் விதமாக சிலவற்றைச் செய்தார்கள்.
பிறந்தநாள் அதுவுமாக, குறிப்பாக 50வது பிறந்தநாளில் 'சுருட்டு' பிடிக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகப் போகிறது என்பது சூர்யாவுக்குத் தெரியாமல் இருக்காது. அப்படி ஒரு போஸ்டரை அவர் வெளியிட அனுமதித்தது ஏன் என்று சமூக வலைத்தளங்களில் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படியான போஸ்டர்களுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்யும் அன்புமணி ராமதாஸ் கூட அமைதியாக இருக்கிறாரே என ரசிகர்கள் கேட்கிறார்கள்.
சில நடிகர்கள் இப்படி சர்ச்சை வரும் விதத்தில் வேண்டுமென்றே புகைப்பது, குடிப்பது போன்றவற்றை தங்கள் பட 'புரமோஷனுக்கு' பயன்படுத்துவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
சமூகத்தின் மீது உண்மையான அக்கறை இருந்தால் இந்த 'சுருட்டு' போஸ்டரை உடனடியாக நீக்கச் சொல்வாரா சூர்யா ?, அதோடு அப்படி ஒரு போஸ்டர் வெளியானதற்கு வருத்தம் தெரிவிப்பாரா ?. அல்லது, படத்தின் கதைப்படி, காட்சிப்படி அது தேவையானதாக உள்ளது என்று சமாளிப்பாரா ?.