'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா |

தெலுங்கு, மலையாள படங்களை இயக்கிய மணிரத்னத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த விரும்பியவர் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவை தம்பி. அப்போது வெற்றிகரமான ஜோடிகளாக இருந்த அம்பிகா, ராதா, மோகன் இணைந்து நடிக்க அதற்கேற்ப ஒரு கதையை தயார் செய்து அதனை மணிரத்னம் இயக்க ஏற்பாடானது. இதற்கு மணிரத்னமும் ஒத்துக் கொண்டார்.
அதற்கு முன்னதாக அவர் 'பகல்நிலவு' படத்தை இயக்கினார். அந்த படம் முடிந்து வரும்வரை கோவை தம்பி காத்திருந்தார். பின்னர் மணிரத்னத்திற்கு அந்த கதையை இயக்க விருப்பமில்லை. அது ஒரு சாதாரண காதல் கதை. அதை யார் வேண்டுமானாலும் இயக்கலாம் என்று கூறி 'மவுன ராகம்' படத்தின் கதையை சொன்னார். ஆனால் அந்த கதை கோவை தம்பிக்கு பிடிக்கவில்லை.
இதனால் வேறு வழியில்லாமல் மணிரத்னம் 'இதய கோவில்' படத்தை இயக்கினார். விருப்பமே இல்லாமல் கவுண்டமணி, செந்தில் காமெடி காட்சிகளை இயக்கினார். படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று மணிரத்னம் விரும்பினார், ஆனால் கோவை தம்பி, ராஜ ராஜனை நியமித்தார்.
ஒரு வழியாக படம் வெளிவந்து சுமாரான வரவேற்பை பெற்றது. இளையராஜாவின் பாடல்கள் பேசப்பட்டது. பின்னாளில் இது குறித்து பேசிய மணிரத்னம், "இதயகோவில் மாதிரியான படங்களை இயக்க நான் சினிமாவிற்கு வரவில்லை" என்று கூறினார். கோவை தம்பி குறிப்பிடும்போது இதயகோவில் படத்தின் பட்ஜெட்டை மணிரத்னம் 3 மடங்கு உயர்த்தி விட்டதாக குற்றம் சாட்டினார்.