பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? | இன்று 7 படங்கள் ரிலீஸ் : முன்பதிவு நிலவரம் என்ன? |
விஜய் ஆண்டனி நடிக்கும் சக்தித்திருமகன் படத்தின் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. ‛அருவி' அருண் பிரபு இயக்கும் இந்த படம் செப்டம்பர் 5ல் ரிலீஸ் ஆகிறது. நேற்று விஜய் ஆண்டனியின் 50வது பிறந்தநாள், அவர் நடிக்கும் 25வது படம் சக்தித்திருமகன் என்பதால், நேற்றைய நிகழ்ச்சி களைகட்டியது. ஆரம்பத்தில் துப்பாக்கியால் சுட்டு விருந்தினர்களை மேடைக்கு அழைத்தார் விஜய் ஆண்டனி. இது அரசியல் கலந்த திரில்லர் கதை என்பதால் இந்த ஏற்பாடு என்றார்.
அடுத்து அவர் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டுவதற்கு பதிலாக பிரியாணி வெட்டி, அதில் இருந்த பீசை சுற்றி இருந்தவர்களுக்கு கொடுத்தார். அடுத்து ஒரு ஆமை பொம்மையை மேடைக்கு எடுத்து வந்து, அதற்கு மாலை மரியாதை செய்தார். தான் கடைசியாக நடித்த மார்கன் படம் வெற்றி பெற்றுள்ளது. அதில் ஆமை முக்கியமான விஷயமாக இருந்தது. அதனால், இந்த மரியாதை, இனி ஆமையை அதிர்ஷ்டம் இல்லாதது என்று சொல்லாதீர்கள் என்றார்.
நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு கிண்டலாக பதில் அளித்தார். நான் உங்களை பார்க்கும்போது சந்தோஷம் ஆகிவிடுகிறேன். அதனால்தான் இப்படி நடந்து கொள்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் இதெல்லாம் மன்சூர் அலிகான் பாணியாச்சே. அந்த ஏட்டிக்கு போட்டிக்கு விஜய் ஆண்டனியும் மாறிவிட்டாரே என்று கமென்ட் அடித்தனர்.