வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
டிக் டாக் செயலியில் ஆபாசமான, கவர்ச்சியான வீடியோக்களை பதிவேற்றி பிரபலமானவர் இலக்கியா. நீ சுடத் தான் வந்தியா என்ற படத்திலும் இவர் நடித்தார். இந்த படம் வந்ததா என்று கூட தெரியவில்லை. ‛டிக் டாக்' தடை செய்யப்பட்ட பின்னர் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு வந்தார். பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை இலக்கியா எடுத்துள்ளார். இதனால் மயங்கிய அவர் முதலில் பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் "என்னோட சாவுக்கு ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் காரணம். என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன்கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணு கூட பழக்கம், அதைக்கேட்டா என்னை போட்டு அடிக்குறான். நானும் பொறுத்து பொறுத்து... என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த பதிவை அவர் நீக்கிவிட்டதாக தெரிகிறது. மேலும் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக செய்தி பரவிய நிலையில் ‛எல்லாமே பொய்யான செய்தி' என இன்ஸ்டா ஸ்டோரியில் இலக்கியா குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் அவர் தற்கொலைக்கு தான் முயற்சித்தாரா... இல்லை அளவுக்கு அதிகமான ஊட்டசத்து மாத்திரை எடுத்ததால் மயங்கினாரா.... ஸ்டன்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் மீது கூறிய குற்றச்சாட்டு என்ன என்பதை அவரே விளக்கினால் தான் உண்மை தெரிய வரும்.