வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
போலோ சங்கர் படத்தை அடுத்து தற்போது விஸ்வாம்பரா மற்றும் தனது 157வது படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இதில் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் அவர் நடித்துள்ள விஸ்வாம்பரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தில் ஏற்கனவே ஒரு சிறப்பு பாடலுக்கு தமன்னா நடனமாடிய நிலையில், தற்போது இன்னொரு பாடலுக்கு அவருடன் இணைந்து பாலிவுட் நடிகை மவுனி ராய் நடனமாடுகிறார். இந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பாடலுக்கு சேகர் மாஸ்டர் நடனம் அமைக்கிறார். கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதியை, இந்த சிறப்பு பாடல் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இப்படத்தை தயாரித்து வரும் யுவி கிரியேஷன்ஸ் அறிவிக்க உள்ளது.