வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தமிழ் சினிமாவில் சில தெலுங்கு நடிகர்களும் ஒரு காலத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். 80களின் இறுதியில் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் நாகார்ஜுனா. 1989ல் அவர் தெலுங்கில் நடித்து தமிழில் டப்பிங் ஆகி வெளியான 'இதயத்தை திருடாதே, சிவா' ஆகிய இரண்டு படங்களும் இங்கு பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றன.
அதன்பின் 1997ல் தான் நேரடியாக தமிழில் 'ரட்சகன்' படத்தில் நடித்தார் நாகார்ஜுனா. அதற்கடுத்து 2011ல் தமிழ், தெலுங்கில் தயாரான 'பயணம்', பின்னர் 2016ல் தமிழ், தெலுங்கில் தயாரான 'தோழா' ஆகியவற்றில் நடித்தார். அதே போல கடந்த மாதம் வெளியான தமிழ், தெலுங்கில் தயாரான 'குபேரா' படத்திலும் நடித்திருந்தார். அடுத்து 'கூலி' படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். இத்தனை ஆண்டு கால சினிமா வரலாற்றில் நாகார்ஜுனா வில்லனாக நடிப்பது இதுதான் முதல் முறை.
இக்கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைப்பதற்காக ஆறு முறை சந்தித்து கதையைச் சொல்லி சம்மதிக்க வைத்துள்ளார் லோகேஷ். கல்லூரியில் படித்த நாட்களில் 'ரட்சகன்' படத்தைப் பார்த்து நாகார்ஜுனாவின் தீவிர ரசிகராக இருந்திருக்கிறார் லோகேஷ். அப்போது நாகார்ஜுனாவின் ஹேர்ஸ்டைலைத்தான் அவரும் அவரது நண்பர்களும் வைத்திருந்தார்களாம். அந்த அளவுக்கு ரசிகராக இருந்து, அவரை தன் படத்திலேயே நடிக்கவும் வைத்திருக்கிறார்.
தனது டப்பிங் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நாகார்ஜுனா. ஆனால், அவர் நேரடியாக தமிழில் முதன் முதலில் நடித்த 'ரட்சகன்' படம் தோல்வியைத்தான் தழுவியது அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. இருந்தாலும் ஏஆர் ரஹ்மான் இசையில் அந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டாக அமைந்தது.