பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு |
ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் பாபு விஜய் தற்போது முதல்முறையாக இயக்கியுள்ள படம் 'சட்டென்று மாறுது வானிலை'. இதில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்திற்காக பாபு விஜய் அளித்த பேட்டியில், சர்கார் பட காலகட்டத்தில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதன்படி, "சர்கார் படம் உருவாகி வந்தபோது விஜய் சாருடன் நெருங்கி பழக சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நாள் என்னை கதை சொல்ல வரச் சொன்னார். இரண்டரை மணி நேரம் கதை கேட்ட பிறகு 'இந்தக் கதையை நான் பண்ண முடியாது. என்னோட சம்பளம், வியாபாரம் எல்லாம் மாறிவிட்டது. அப்புறம் ஏன் வரச்சொல்லிக் கதை கேட்டீங்கன்னு நீ கேட்கலாம்? உன் கதைகளம் எப்படி இருக்குன்னு பார்க்க விரும்பினேன். நல்லா இருக்கு கதை. ஒரு படம் உருவாக்கிய பிறகு வா பார்க்கலாம் என்று கூறினார். அந்த மனசு தான் விஜய் சார்." என தெரிவித்துள்ளார்.