தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
ஒளிப்பதிவாளர், இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் 'மழை பிடிக்காத மனிதன்'. கடந்த வருடம் ஆகஸ்ட் 2ம் தேதி இந்தப் படம் வெளிவந்தது. இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, விஜய் ஆண்டனி, சரத்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பையும், வெற்றியையும் பெறவில்லை.
படம் வெளியான போதே ஒரு சர்ச்சை எழுந்தது. படத்தின் ஆரம்பத்தில் இடம் பெற்ற ஒரு நிமிடம் ஓடக் கூடிய அறிமுகக் காட்சி ஒன்று தனக்குத் தெரியாமல் படத்தில் சேர்த்துள்ளதாக படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் அப்போது குற்றம் சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அந்த அறிமுகக் காட்சி நீக்கப்பட்டது.
அந்தக் காட்சியை படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி சேர்த்தாரா அல்லது தயாரிப்பாளர்கள் சேர்த்தார்களா என்ற சர்ச்சை எழுந்தது. சில நாட்களில் அது நீக்கப்பட்டதாலும், படமும் தியேட்டர்களில் ஓடாததாலும் சர்ச்சையும் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு அந்த சர்ச்சையை மீண்டும் நினைவூட்டியுள்ளார் இயக்குனர் விஜய் மில்டன். 'ராஞ்சனா' படத்தின் ரீ-ரிலீஸில் ஏஐ மூலம் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையை மறுபதிவு செய்து, “மழை பிடிக்காத மனிதன்' படத்திற்கும் இதுதான் நடந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.