திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதா கொங்கரா இயக்கி வரும் பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அனிருத் இசையில் உருவான மதராஸி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.
அவரிடம் இதுவரை நீங்கள் நடித்த படங்களில் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‛‛ஏற்கனவே நடித்த படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க வேண்டும் என்கிறபோதே பயமாக உள்ளது. காரணம் அதற்கேற்ற கதை கிடைக்க வேண்டும். அதோடு, முதல் பாகத்தின் வெற்றியும் பாதித்து விடக்கூடாது. நான் இதுவரை நடித்த படங்களில் மாவீரன் படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிப்பதற்கு தான் ஆசையாக உள்ளேன். அது தனித்துவமான கதை'' என்று தெரிவித்துள்ளார் .
மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்திருந்தார். அசரீரி குரலாக விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்திருந்தார்.