தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த அவர் பல வெள்ளி விழா படங்களை கொடுத்தவர். புகழின் உச்சியில் இருக்கும்போது தானே சொந்தமாக படங்களை தயாரிக்கும் முடிவுடன் 'ஸ்ரீசுகுமாரன் புரோடக்சன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 'மச்சரேகை 'என்ற படத்தை தயாரித்தார். அது சுமாராக ஓடியது. அதனையடுத்து 'விளையாட்டு பொம்மை' படத்தை தயாரித்தார். அதுவும் அவருக்கு பலன் தரவில்லை.
அடுத்து தானே 'சின்னத்துரை' என்ற படத்தை இயக்கினார். அதுதான் அவரது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. வழுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய 'இருமன கன்னிகள்' என்ற நாவலை திரைப்படமாக்கினார். இது ஒரு ரொமாண்டிக் திரில்லர் கதை.
இதில் அவருடன் எஸ்.வரலக்ஷ்மி, பி.ஆர்.பந்துலு, டி.கே.ராமச்சந்திரன், வி.கே.ராமசாமி, ஜே.பி.சந்திரபாபு, ஜி.சகுந்தலா, எஸ்.ஆர்.வரலட்சுமி, கே.சயீராம், 'ஸ்டண்ட்' சோமு, 'ஜெயக்கொடி' கே.நடராஜன், கே.எஸ்.ஹரிஹரன், ராமையா சாஸ்திரி, கே.ராமு, வேணுபாய், கே.எஸ்.அங்கமுத்து மற்றும் சி.ஆர்.ராஜகுமாரி, சௌதாமினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது.
இந்த படம் பெரிய தோல்வி அடைந்தது. தொடர் தோல்விகளால் தன் சொத்துக்களை இழந்தார். அடுத்துவந்த நான்கு ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி இருந்தார். நான்கு ஆண்டுகள் கழித்து 'மாலையிட்ட மங்கை' படத்தின் மூலமாக திரையுலகில் மீண்டு வந்தார். அதன்பிறகு எம்ஜிஆர், சிவாஜியின் காலம் வரை நடித்துக் கொண்டிருந்தார்.