தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

2025ம் ஆண்டிலும் வாராவாரம் நான்கைந்து படங்கள் சராசரியாக வெளியாவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வாரத்துடன் வெளியான படங்களையும் சேர்த்து இந்த வருடத்தில் இதுவரை வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 150ஐக் கடந்துவிட்டது.
இந்த வாரம் ஆகஸ்ட் 8ம் தேதி முதலில் ஆறு படங்கள்தான் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது 13 படங்கள் வரை வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. “அகதி, பாய், காத்துவாக்குல ஒரு காதல், மாமரம், நாளை நமதே, நெடுமி, நிஷா, ஒரு கைதியின் நாட்குறிப்பு, ராகு கேது, ரெட் பிளவர், தங்க கோட்டை, உழவர் மகன், வானரன்” ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளன.
இந்த வருடத்தில் இதுவரையில் ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளியானதில்லை. கடந்த வாரம் 7 படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் 13 படங்கள் வெளியாவது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. போன வாரம் வெளியான சில படங்கள் தமிழகம் முழுவதிலுமே 10 முதல் 20 தியேட்டர்கள் வரையில்தான் திரையிடப்பட்டுள்ளன. ரசிகர்கள் வராததால் பல படங்களின் காட்சிகள் முதல் நாளிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையை எந்த சங்கமும் கண்டு கொள்ளவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று.