கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

'பரமசிவன் பாத்திமா' படத்தின் மூலம் அறிமுகமானவர் சேஷ்விதா கனிமொழி. விஜய் ஆண்டனி நடித்த மார்கன் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார். தற்போது 'குற்றம் புதிது' என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நோகா ஆர்ம்ஸ்ட்ராங் என்ற புதுமுகம் இயக்குகிறார். தருண் விஜய் என்ற புதுமுகம் இதில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சேஷ்விதா நடிக்கிறார்.
இவர்களுடன் மதுசூதனராவ், நிழல்கள் ரவி, ராமசந்திரன் துரைராஜ், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், கரன் கிருபா இசை அமைத்துள்ளார்.
சேஷ்விதா கூறும்போது "பரமசிவன் பாத்திமா படம் எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. 'மார்கன்' படம் நடிக்க நல்ல வாய்ப்பு கொடுத்தது. ஆனால் இந்த படம்தான் எனது முதல் படம். ஆடிசன் மூலம் தேர்வானேன். 3 மாதங்கள் வரை பயிற்சி எடுத்து நடித்தேன். இதில் தந்தை - மகளுக்கு இடையிலான உறவை சொல்லும் பகுதியில் மகளாக நடித்திருக்கிறேன். ஆனாலும் ஒரு மெடிக்கல் த்ரில்லர் படம். தொடர்ந்து வாய்ப்புகள் வருகிறது என்றார்.