தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'குட் பேட் அக்லி' படத்தை அடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 64வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் அஜித் குமார், லட்சுமி விரதத்தை முன்னிட்டு சென்னை வந்திருந்தார். அப்போது சாமி தரிசனம் செய்துவிட்டு தாம்பூலத்தில் திருநீரை எடுத்து தனது மனைவி ஷாலினியின் நெற்றியில் வைத்து விடுகிறார் அஜித்குமார்.
அதையடுத்து அவர் அஜித்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறார். அப்போது அவரை தூக்கி விட்டபடி, தன்னருகில் நிற்பவர்களை பார்த்து, ''வீட்ல போய் நான் காலில் விழணும்'' என்று சிரித்தபடியே ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார் அஜித். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.