தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

‛அருவி' புகழ் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி அவரது 25வது படமாக நடித்துள்ள படம் 'சக்தி திருமகன்'. இப்படம் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "இயக்குனர் சசி என்னிடம் 'பிச்சைக்காரன்' படத்தின் கதையைக் கூறும்போதே கண்களில் நீர் தேங்கியது. அந்தப் படம் சோகமான கதை இல்லை தான். ஆனால், மிகவும் உணர்வுபூர்வமானது. இந்த உணர்வை எனக்கு மீண்டும் ஏற்படுத்தும்படியான இன்னொரு கதையை சசி என்னிடம் கூறியுள்ளார். எங்கள் கூட்டணியில் அந்தப் படம் சீக்கிரம் உருவாகும்" என தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனிக்கு நடிகராக திருப்புமுனையை தந்த படம் பிச்சைக்காரன். அந்தப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெற்றி பெற்றது.