அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் |

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மூன்று கதாநாயகிகளில் அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். தற்போது மலையாளத்திலும், தெலுங்கிலும் மாறி மாறி பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் இவருக்கு ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது தெலுங்கில் நடித்துள்ள பரதா (பர்தா) என்கிற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதில் நடிகை சங்கீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மலையாளத்தில் ஹிருதயம், ஜெய ஜெய ஹே உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த தர்ஷனா ராஜேந்திரன் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
அப்போது அனுபமாவிடம் கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்கள், தெலுங்கு திரைப்படங்களில் உங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் சில நொடிகள் கண்கலங்கி எமோஷனல் ஆகிவிட்டார். அருகில் இருந்த இயக்குனர் உள்ளிட்டோர் அவரை ஆறுதல் படுத்தினார்கள். அதன் பிறகு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “இங்கு இருக்கும் ரசிகர்கள் என்னை ஒரு ஹீரோவாக நடத்துகிறார்கள். அது என்னுடைய பாக்கியம். அதை நான் அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்.