தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்துக்கு (அம்மா) சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் புதிய தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள நடிகர் சங்க வரலாற்றில் பெண் ஒருவர் தலைவரானது இதுதான் முதன்முறை.
புதிதாக பொறுப்பேற்றுள்ள ஸ்வேதா மேனன் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்னைகள், மனகசப்புகள் காரணமாக சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்பி வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது "சங்கத்தில் இருந்து விலகியவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட நடிகை, சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தார். அவர் உள்பட ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் வந்தால் நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைவேன். ஆனால், விலகியவர்களை சேர்ப்பது முக்கிய பணி அல்ல. அதைவிட முக்கியமான பணிகள் காத்திருக்கிறது. என்றாலும் சென்றவர்கள் திரும்பி வருவதற்கு நடிகர் சங்கத்தின் வாசல் திறந்தே இருக்கும்" என்கிறார் ஸ்வேதா.