8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் | மருமகனுக்காக மாமா படம் தயாரிப்பாரா? | 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன மெமரி கார்டை கண்டுபிடிக்க சிறப்பு குழுவை நியமித்த ஸ்வேதா மேனன் |
விஜயகாந்த் இளையமகன் சண்முகப்பாண்டியன் ‛சகாப்தம்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். 2015ல் வெளியான அந்த படம் ஹிட்டாகவில்லை. அடுத்து ‛மதுரவீரன்' என்ற படத்தில் நடித்தார், அதுவும் பெரிய வெற்றிபெறவில்லை. சற்றே இடைவெளிக்குபின் அவர் நடித்த ‛படைத்தலைவன்'-ம் சரியாக போகவில்லை. இப்போது ‛கொம்புசீவி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை ‛வருத்தப் படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் கமர்ஷியலாக உருவாக்கி வருகிறார்.
இதற்கிடையில், சண்முகப்பாண்டியனை வைத்து ‛ரமணா 2' எடுக்க ரெடி என்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ‛கேப்டன் பிரபாகரன் 2' உருவாக்க தயார் என்கிறார் ஆர்.கே.செல்வமணி. ஆனால், இந்த படங்கள் தயாரிப்பதில் சிக்கல். காரணம், சண்முகபாண்டியன் மார்க்கெட் காரணமாக இந்த படங்களை தயாரிக்க தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.
சண்முகபாண்டியன் மாமாவும், பிரேமலதா தம்பியுமான எல்.கே.சுதீஷ் பிரபல தயாரிப்பாளர். அவர் விஜயகாந்த்தை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்தவர். அவர் மருமகனுக்காக இந்த படங்களை தயாரித்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் கோலிவுட்டில். அரசியல் குடும்பத்தில் இருந்து வந்து இருப்பதால் அவரை வைத்து படம் தயாரிக்க சிலர் தயங்குகிறார்கள். படப்பிடிப்பு, படம் ரிலீஸ் சமயத்தில் சிக்கல் வருமோ என்று பயப்படுகிறார்கள். அதனால், தகுந்த தயாரிப்பாளர் இல்லாமல் சண்முகபாண்டியன் தவிப்பதாக தகவல்.