தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மறைந்த நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அவர் 1988ம் ஆண்டில் சென்னை ஈசிஆர் சாலையில் சில சொத்துக்களை வாங்கி இருக்கிறார். அதில், பீச் ஹவுஸ் மற்றும் நீச்சல் குளம் இடம்பெற்றுள்ளது. இந்த சொத்துக்களை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் பராமரித்து வருகிறார். ஆனால் இந்த நேரத்தில் மூன்று நபர்கள் போலியான வாரிசு சான்றிதழ் தயார் செய்து அந்த சொத்துக்கு உரிமை கோரி வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் அதற்கு எதிராக சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார் போனி கபூர். அதில், போலியான சான்றிதழ்களை பயன்படுத்தி தனது சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாகவும், அந்த போலி சான்றிதழ்களை ரத்து செய்ய கோரியும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலம் குறித்து தாம்பரம் தாசில்தார் நான்கு வாரங்களில் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.