தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகை ஷாலின் சோயா மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'ராஜா மந்திரி' படத்தில் நடித்திருந்தார். மேலும் ‛குக் வித் கோமாளி 5' என்கிற ரியாலிட்டி ஷோவின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஷாலின் சோயா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் ஆசை குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: " எனக்கு நல்ல நல்ல படங்களை இயக்க வேண்டும் என்பது தான் கனவு. இதை நான் கூறினால், என்னை நடிக்கிறாள் என்று சொல்கிறார்கள். என்னைப் பத்தி என்ன தெரியும் அவங்களுக்கு ? 10 வருடங்களாக படம் இயக்க முயற்சி செய்து வருகிறேன். இதுவரை 8க்கும் மேல் குறும்படங்களை இயக்கியுள்ளேன். நாம வாழ்ந்து வரும் வாழ்க்கைக்கு அர்த்தம் வேணும். அது எனக்கு சினிமாதான். இறப்பதற்கு முன்பு ஒரு நல்ல இயக்குனர் என்கிற பெயரை நான் வாங்கணும். மக்களை என்டர்டெயின் பண்ணணும். அதுதான் என் லட்சியம். " என மனம் திறந்து பேசியுள்ளார் ஷாலின் சோயா.