‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
நடிகை ஷாலின் சோயா மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'ராஜா மந்திரி' படத்தில் நடித்திருந்தார். மேலும் ‛குக் வித் கோமாளி 5' என்கிற ரியாலிட்டி ஷோவின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஷாலின் சோயா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் ஆசை குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: " எனக்கு நல்ல நல்ல படங்களை இயக்க வேண்டும் என்பது தான் கனவு. இதை நான் கூறினால், என்னை நடிக்கிறாள் என்று சொல்கிறார்கள். என்னைப் பத்தி என்ன தெரியும் அவங்களுக்கு ? 10 வருடங்களாக படம் இயக்க முயற்சி செய்து வருகிறேன். இதுவரை 8க்கும் மேல் குறும்படங்களை இயக்கியுள்ளேன். நாம வாழ்ந்து வரும் வாழ்க்கைக்கு அர்த்தம் வேணும். அது எனக்கு சினிமாதான். இறப்பதற்கு முன்பு ஒரு நல்ல இயக்குனர் என்கிற பெயரை நான் வாங்கணும். மக்களை என்டர்டெயின் பண்ணணும். அதுதான் என் லட்சியம். " என மனம் திறந்து பேசியுள்ளார் ஷாலின் சோயா.