தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

‛உயிருள்ளவரை உஷா' ரீ-ரிலீஸ் பிரஸ்மீட்டில் பேசிய டி.ராஜேந்தர் அந்த காலத்தில் படங்களில் நல்ல காமெடி இருந்தது. திறமையான காமெடி நடிகர்கள் இருந்தனர். உயிருள்ளவரை உஷா படத்தில் கூட கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்தனர். அடுத்து நான் இயக்கும் படத்தில் சில காமெடியன்களை அறிமுகப்படுத்த போகிறேன் என்றார்.
இது உண்மைதான் தமிழ் சினிமாவில் காமெடி பஞ்சம் இருக்கிறது. இப்பவெல்லாம் வயிறு வலிக்க ஏன் மனம் விட்டு கூட சிரிக்கிற காமெடி வருவது இல்லை. விவேக், மனோ பாலா போன்றவர்கள் காலமாகிவிட்டார்கள். கவுண்டமணி, செந்தில் நடிப்பது இல்லை. வடிவேலு கதை நாயகனாக நடிப்பதில் ஆர்வம் காண்பிக்கிறார். அவர் காமெடியும் முன்போல இல்லை. சூரி, சந்தானம் ஹீரோ ஆகிவிட்டார்கள். சதீஷ் கூட அந்த வழியில் செல்கிறார்.
கருணாகரன், ரோபோ சங்கர், ரமேஷ் திலக், சாம்ஸ் போன்றவர்கள் தவிக்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன் பீல்ட் அவுட் ஆகிவிட்டார். இப்போது இருக்கிற பெரிய காமெடியன் யோகிபாபு மட்டுமே. அவரும் பெரிய சிரிப்பை தருவதில்லை. கடந்த சில ஆண்டுகளில் பெயர் சொல்லும் காமெடிகள் உருவாகவில்லை. டி.ஆர்.சொன்னது மாதிரி கோலிவுட்டில் திறமையான காமெடியன்கள், நல்ல காமெடி படங்கள் இல்லாமல் வறட்சியில் தவிக்குது தமிழ் சினிமா என்கிறார்கள்.