தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

கோவை : ‛‛அரசியல் நாகரீகம் தெரியாத நடிகர் விஜய், பிரதமர் மோடி பற்றி பேச அருகதை இல்லை. எனக்கு வர கோபத்திற்கு ஓங்கி குத்த வேண்டும் என தோன்றுவதாக'' நடிகர் ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் அவேசமாக பேசினார்.
‛பொன் விலங்கு' படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் ரஞ்சித். தொடர்ந்து ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர வேடம் என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பா.ஜ., கட்சியில் உள்ளார். கோவையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
இதில் ரஞ்சித் பேசியதாவது... ‛‛மதுரை மாநாட்டில் விஜய் பேசும்போது சொடக்கு போட்டு பிரதமர் மோடியை குறிப்பிடுகிறார். 2014ல் கோவையில் பிரதமரை அவர் சந்தித்தபோது பூனைக்குட்டி போல் கையை கட்டிக் கொண்டு அமர்ந்ததை மறந்துவிட்டார் போல. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போல, தம்பி மறந்துவிட்டார். மூளையில் பிரச்னை இருக்கு.
மிஸ்டர் மிஸ்டர் என சொடக்கு போட்டு பிரதமர் மோடியை பேசுகிறார். நான் ஒரு வாக்காளன். ஒரு குடிமகனாக எனக்கு அப்பா யாரென்றால் அது மோடி தான். இன்றைக்கு உலக நாடுகள் மற்றும் அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரு தலைவர் மோடி. அவரை கைநீட்டி சொடக்கு போட்டு பேச விஜய்க்கு அருகதை இல்லை. முதல்வரை அங்கிள் என்றும், பிரதமரை மிஸ்டர் என்றும் குறிப்பிடுகிறார். இதுதான் அரசியல் நாகரீகமா. அரசியலில் நல்லவர்களை சல்லடை போட்டு தேடும் நிலை உள்ளது. எனக்கு வர கோபத்திற்கு ஓங்கி குத்த வேண்டும் என தோன்றுகிறது. அதனை நாம் ஓட்டால் குத்துவோம்''
இவ்வாறு பேசினார்.