நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கியவர் நெல்சன். அந்த படம் 600 கோடி வசூலித்தது. அதையடுத்து ரஜினி நடித்த வேட்டையன் பெரிதாக வசூலிக்காத நிலையில், தற்போது கூலி படம் 500 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினி. வேட்டையன் படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடித்த நிலையில், கூலி படத்தில் அமீர்கான் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த ஜெயிலர்-2 படத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் இணைந்திருக்கிறார்.
இந்நிலையில் ஜெயிலர் -2 படம் குறித்து ஒரு விழாவில் இயக்குனர் நெல்சன் கூறும்போது, ‛‛ஜெயிலர் படத்தைப் போலவே ஜெயிலர் 2 படமும் மிகச் சிறப்பாக வந்துள்ளது. என்றாலும் இந்த படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று இப்போதே என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக இருக்கும். முக்கியமாக இப்போதே ஜெயிலர் 2 படம் குறித்து ஓவராக ஹைப்பை ஏற்றி பேச விரும்பவில்லை. ஏற்கனவே ஜெயிலர் 2 படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நேரத்தில் நானும் இன்னும் ஹைப்பை ஏற்றும் வகையில் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். அப்படி நானும் பேசினால் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து விடும்'' என்று கூறினார் .