தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான சில திரைப்படங்கள் 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளன. ஆனால், தமிழ் சினிமாவில் இன்னும் அந்த சாதனை நிகழ்த்தப்படவில்லை. எதிர்பார்க்கப்பட்ட சில படங்களும் 500 கோடி வசூலைக் கடந்து நின்றுவிடுகின்றன.
தெலுங்கு சினிமாவில் இப்படி 1000 கோடி வசூலிப்பதன் காரணம் என்ன என்பதைப் பற்றி ஐதராபாத்தில் நடந்த 'மதராஸி' பட நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
“மதராஸி' படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸ், பெரிய நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ்பாபு ஆகியோரை இயக்கியவர். அவருடன் நான் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியானது. இந்தப் படம் சிறப்பாக வந்துள்ளது. அனிருத் அற்புதமான பாடல்களையும், பின்னணி இசையையும் கொடுத்துள்ளார்.
திருப்பதி பிரசாத் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். 'கன்டென்ட்' சிறப்பாக இருந்தால் அவர் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார். அதனால்தான் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து 1000 கோடி என படங்கள் ஹிட் ஆகின்றன. 'மதராஸி' படத்திற்கும் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். நிச்சயம் இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும்,” என்று பேசியுள்ளார்.
தெலுங்கு சினிமாவிற்குச் சென்று அங்கு அவர்களைப் பாராட்டிப் பேசுவதில் தவறில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் 'கன்டென்ட்' நன்றாக இருந்தாலும் செலவு செய்வதில்லை என்று மறைமுகமாக சொல்வது போல் இருக்கிறதே?.