பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
சமீபகாலமாக தென்னிந்திய அளவில் பரபரப்பாக பேசப்படும் அளவிற்கு முன்னேறி வருகிறார் நடிகை ருக்மணி வசந்த். சில மாதங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி வழியாக ஏஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராஸி படத்தில் நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இது தவிர கன்னடத்தில் யஷ் ஜோடியாக டாக்ஸிக், ரிஷப் ஷெட்டி ஜோடியாக காந்தாரா ' சாப்டர் 1' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் தெலுங்கில் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் டிராகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் படத்திலும் ருக்மணி வசந்த் தான் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் கடந்த சில நாட்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்ற மதராஸி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அந்த படத்தின் தயாரிப்பாளர் என்.வி.பிரசாத் பேசும்போது, ருக்மணி வசந்த் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்கிற ரகசியத்தை வெளிப்படையாகவே கூறிவிட்டார். அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீ லீலா போல வரும் நாட்களில் ரசிகர்களை ருக்மணி வசந்த் ஜுரம் பிடித்துக்கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை.