ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

தாய் சங்கமான தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பிரிந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், 2020ல் பாரதிராஜாவால் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இதில் 365 தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து, புதிய நிர்வாக குழு அமைக்க வேண்டும். அதன்படி, 2025-28-க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், தேர்தல் அதிகாரியாக சங்கத்தால் நியமிக்கப்பட்டு, தேர்தல் நடைபெற்றது. 7 அலுவலக நிர்வாகிகள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவன தலைவராக பாரதிராஜா நீடிக்கிறார், செயல் தலைவராக டி.ஜி.தியாகராஜன், பொதுச் செயலாளராக டி.சிவா, துணை தலைவர்களாக எஸ்.ஆர்.பிரபு, லலித்குமார், பொருளாளராக தனஞ்செயன், இணை செயலாளர்களாக முகேஷ் ஆர்.மெஹ்தா, வினோத்குமார் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர் சி, விக்னேஷ் சிவன், ஆர்.கண்ணன், ரமேஷ் பிள்ளை, லக்ஷ்மன் குமார், சுதன் சுந்தரம், கமல் போஹ்ரா , கார்த்திகேயன் சந்தானம், நிதின் சத்யா ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்படுள்ளனர்.