பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
1952ம் ஆண்டு எல்.வி.பிரசாத் இயக்கத்தில் உருவான படம் 'ராணி'. வீணை பாலச்சந்தர் நாயகனாகவும், பி.பானுமதி நாயகியாகவும் நடித்தனர். கதாநாயகியை மையமாகக் கொண்ட கதை. 1948ம் ஆண்டு ரீட்டா ஹேவொர்த் முக்கிய வேடத்தில் நடித்த 'தி லவ்ஸ் ஆப் கார்மென்' என்ற அமெரிக்கத் திரைப்படத்தைத் தழுவி 'ராணி' திரைப்படம் உருவாக்கப்பட்டது.
ஒரு நாட்டில் ராஜாவிற்கு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ராஜமுத்திரையாக பச்சை குத்தப்படுவது வழக்கம். பச்சை குத்தும் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவன் தங்கள் இனத்து பிள்ளைக்கு பச்சை குத்தி அதை ராஜாவின் மகள் போல் அரண்மணையில் விட்டுச் சென்று ராஜாவின் மகளை தன் மகள்போல் கடத்திச் செல்கிறான். உண்மையான இளவரசி பழங்குடியின மக்களோடு திரிகிறாள், பழங்குடியின பெண் ராணியாக வளர்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
பானுமதி இளவரசி வேடத்திலும், பாலசந்தர் அவளை காதலிக்கும் சிப்பாய் வேடத்திலும் நடித்தனர். எஸ்.வி.சுப்பையா, எம்.சரோஜா, வகாப் காஷ்மீரி, எம்.ஆர்.சந்தனம் மற்றும் பேபி சச்சு ஆகியோரும் அவர்களுடன் நடித்தனர். இந்த படம் ஹிந்தியில் தயாரானபோது அனூப்குமார் நடித்தார்.
அமெரிக்க படத்தில் இளவரசியாக நடித்தவர் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தை பார்த்த பானுமதி இப்படி நான் நடிக்க மாட்டேன் என்று முதலில் நடிக்க மறுத்து விட்டார். பின்னர் அவர் கேரக்டர் மாற்றப்பட்டு, அணியும் ஆடைகள் மாற்றப்பட்டு அதனை அவரிடம் காட்டிய பிறகே பானுமதி இந்த படத்தில் அழகாக உடையணிந்து நடித்தார்.