பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படம் திரைக்கு வந்தபோது படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் இருப்பதாக சொல்லி ரசிகர்கள் அவரை சோசியல் மீடியாவில் டிரோல் செய்தனர். என்றாலும் விமர்சனங்களை கடந்து அந்த படம் வெற்றி பெற்றது . இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛ஒவ்வொரு படம் வெளியாவதற்கு முன்பும் ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்புகளை வெளியிட தொடங்கி விடுகிறார்கள். அவர்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் எங்களால் படம் பண்ண முடியாது. அதோடு கூலி படத்தை எடுத்துக் கொண்டால் அது டைம் ட்ராவல் படமோ, எல்சியூ படமோ அல்ல. என்றாலும் ரசிகர்களாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். அவர்கள் சொல்லும் கருத்துக்களை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது.
காரணம் ரஜினி சார் படம் என்பது மட்டுமின்றி நான் இயக்கும் படங்களையும் கருத்தில் கொண்டு அவர்கள் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகிறார்கள். என்னை பொருத்தவரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நான் படம் எடுக்க மாட்டேன். நான் எழுதக்கூடிய கதை ரசிகர்களை திருப்திப்படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன். ஒருவேளை அந்த படம் அவர்களை திருப்தி படுத்தவில்லை என்றால் அடுத்த படத்தில் அவர்களை திருப்திபடுத்த முயற்சி செய்வேன். மேலும் ஒரு படத்தின் சக்சஸ் என்பது கோடி கோடியாக வசூலிப்பதில் மட்டுமல்ல, அதை வெற்றிகரமாக எடுத்து ரசிகர்களுக்கு காட்டி விட்டால் அதுவே சக்சஸ்தான் என்கிறார் லோகேஷ் கனகராஜ்.