பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக நடித்தவர் கீது மோகன்தாஸ். தமிழில் நள தமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன் பிறகு இயக்குனராக மாறி விருதுக்கான படங்களாக இயக்கி வருகிறார். அதிலிருந்து சற்று மாறி, கமர்சியல் அம்சங்களுடன் தற்போது கன்னடத்தில் பிரபல முன்னணி நடிகரான யஷ் நடிக்கும் டாக்ஸிக் என்கிற படத்தை இயக்கி வருகிறார் கீது மோகன்தாஸ்.
இந்த நிலையில் இவருக்கும் யஷ்ஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்றும் தற்போது படத்தின் பல காட்சிகளை நடிகர் யஷ் தான் இயக்கி வருகிறார் என்றும் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் மலையாள நடிகர் சுதேவ் நாயர் என்பவர் இது பொய்யான தகவல் என இது குறித்து கூறியுள்ளார்.
“இது சிலரால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி. நான் பணியாற்றிய படங்களிலேயே அழகாக, டென்ஷன் இல்லாமல் இயங்கி வரும் படக்குழு என்றால் அது இதுதான். இன்னும் சொல்லப்போனால் இயக்குனரும் மற்றும் ஹீரோ யஷ் இருவருமே எந்த ஈகோவும் இன்றி ஒருவருக்கொருவர் ஆலோசனைகளை பரிமாறி கொள்வதை நான் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். இவர்கள் இருவரது நோக்கமும் படம் சிறப்பாக வர வேண்டும் என்பதில் தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.