ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக நடித்தவர் கீது மோகன்தாஸ். தமிழில் நள தமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன் பிறகு இயக்குனராக மாறி விருதுக்கான படங்களாக இயக்கி வருகிறார். அதிலிருந்து சற்று மாறி, கமர்சியல் அம்சங்களுடன் தற்போது கன்னடத்தில் பிரபல முன்னணி நடிகரான யஷ் நடிக்கும் டாக்ஸிக் என்கிற படத்தை இயக்கி வருகிறார் கீது மோகன்தாஸ்.
இந்த நிலையில் இவருக்கும் யஷ்ஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்றும் தற்போது படத்தின் பல காட்சிகளை நடிகர் யஷ் தான் இயக்கி வருகிறார் என்றும் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் மலையாள நடிகர் சுதேவ் நாயர் என்பவர் இது பொய்யான தகவல் என இது குறித்து கூறியுள்ளார்.
“இது சிலரால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி. நான் பணியாற்றிய படங்களிலேயே அழகாக, டென்ஷன் இல்லாமல் இயங்கி வரும் படக்குழு என்றால் அது இதுதான். இன்னும் சொல்லப்போனால் இயக்குனரும் மற்றும் ஹீரோ யஷ் இருவருமே எந்த ஈகோவும் இன்றி ஒருவருக்கொருவர் ஆலோசனைகளை பரிமாறி கொள்வதை நான் கண்கூடாகவே பார்த்திருக்கிறேன். இவர்கள் இருவரது நோக்கமும் படம் சிறப்பாக வர வேண்டும் என்பதில் தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.