பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் என்ற கேரக்டரில் நடித்து, சின்னத்திரையில் பிரபலமானவர் குமரன். இவர் குமார சம்பவம் படத்தின் மூலம் ஹீரோவாகி உள்ளார். பாலாஜி வேணு கோபால் இயக்கிய இந்த படம் செப்டம்பர் 12ல் ரிலீஸாகிறது. தான் ஹீரோவானது குறித்து பேசியுள்ள குமரன், ''சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்பது என் கனவு. இப்போது ஆகிவிட்டேன். நான் எமோஷனலாக இருக்கிறேன். இது என்னுடையை 17 ஆண்டு கனவு. இந்த கனவை நனவாக்கி அனைவருக்கும் நன்றி.
எங்க குடும்பத்துல யாரும் சினிமா பேக்கிரவுண்ட் கிடையாது. அப்பா டீக்கடையில வேலை பார்த்தவரு. ஆனா, அவருக்கு நான் சினிமாவில் ஹீரோ ஆகணும்னு ஆசை இருந்தது. அவர் கனவையும் நனவாக்கி இருக்கிறேன். ஆரம்பத்துல எப்படி சினிமாவுக்கு போகணும்னு தெரியலை. எங்கயோ சுற்றி பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் நடித்தேன். ஓரளவு பிரபலம் ஆனேன். இந்த படத்தோட பேரு குமார சம்பவம்.
இது, என் வாழ்க்கையில் முக்கியமான சம்பவமும் கூட. பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்புக்கு போகும்போது சினிமாவுக்கும் இப்படி போகணும்னு நினைச்சிட்டு இருந்தேன், அது நடந்து இருக்கிறது. இந்த பட இயக்குனர் பாலாஜி வேணுகோபால் யுடியூப் நடத்திக் கொண்டு இருந்தபோது, அதுல நடிச்சு இருக்கிறேன். இந்த படத்தை குடும்பத்தோட பார்க்கலாம். முகம் சுளிக்கும் காட்சிகள் இருக்காது'' என்றார்.