பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் |
தெலுங்கில் 'சுபம்' என்ற படத்தை தயாரித்து நடித்த சமந்தா, அடுத்தபடியாக நந்தினி ரெட்டி இயக்கத்தில் 'மா இண்டி பங்காரம்' என்ற படத்தை தயாரித்து நடிக்கப் போகிறார். இந்த நிலையில் தற்போது துபாய் நாட்டிற்கு சென்றுள்ள சமந்தா, அங்கு நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதோடு ஒரு ஆணின் கையையும் அவர் பிடித்துக் கொண்டிருக்கிறார். என்றாலும் அந்த ஆணின் முகம் தெரியவில்லை. இப்படி ஒரு வீடியோவை சமந்தா வெளியிட்டதை அடுத்து அந்த ஆண் தற்போது சமந்தா காதலித்து வரும் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே இயக்குனர் ராஜ் நிடிமொரு கையை பிடித்துக் கொண்டு சமந்தா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதோடு ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு விளையாட்டு நிகழ்ச்சியின்போதும் இருவரும் கைகோர்த்தபடி நடந்தார்கள். இந்த நிலையில் தான், ஒருவரின் கையை தான் பற்றிக்கொண்டிருக்கும் வீடியோவை சமந்தா வெளியிட்டிருப்பதை அடுத்து அந்த நபரும் இயக்குனர் ராஜ் நிடிமொருதான் என்று ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.