தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பலர் நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் 'மதராஸி'.
மதராஸி என தலைப்பு வைத்துள்ளதால் இந்தப் படம் மும்பை போன்ற இடங்களில் நடக்கும் கதையோ என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்தது. ஹிந்தி பேசும் மக்கள் தமிழர்களை மதராஸி என்றழைப்பது வழக்கம்.
ஆனால், படத்தின் கதை தமிழகத்தில்தான் நடக்கிறதாம். வில்லன் வித்யுத் ஜமால், படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனை மதராஸி என அழைப்பதால் படத்திற்கு அந்தப் பெயரை வைத்துள்ளாராம் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்.
மேலும், படத்தின் கதை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். “மேற்கத்திய நாடுகளில் ஒரு முக்கியமான பிரச்னை உள்ளது, அது மெல்ல மெல்ல நம் நாட்டிலும் பரவி வருகிறது. இந்தப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு நான் ஒரு கதையை எழுதினேன். இதன் தலைப்பு வித்தியாசமானது மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. இது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்று நான் உணர்ந்தேன்,” எனத் தெரிவித்துள்ளார்.