பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பலர் நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் 'மதராஸி'.
மதராஸி என தலைப்பு வைத்துள்ளதால் இந்தப் படம் மும்பை போன்ற இடங்களில் நடக்கும் கதையோ என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்தது. ஹிந்தி பேசும் மக்கள் தமிழர்களை மதராஸி என்றழைப்பது வழக்கம்.
ஆனால், படத்தின் கதை தமிழகத்தில்தான் நடக்கிறதாம். வில்லன் வித்யுத் ஜமால், படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனை மதராஸி என அழைப்பதால் படத்திற்கு அந்தப் பெயரை வைத்துள்ளாராம் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்.
மேலும், படத்தின் கதை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். “மேற்கத்திய நாடுகளில் ஒரு முக்கியமான பிரச்னை உள்ளது, அது மெல்ல மெல்ல நம் நாட்டிலும் பரவி வருகிறது. இந்தப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு நான் ஒரு கதையை எழுதினேன். இதன் தலைப்பு வித்தியாசமானது மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. இது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்று நான் உணர்ந்தேன்,” எனத் தெரிவித்துள்ளார்.