வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ஒரு இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'காட்டி' திரைப்படம் நாளை பான் இந்தியா வெளியீடாக வருகிறது. கிரிஷ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஜகபதி பாபு, ஜான் விஜய், சைதன்ய ராவ் மடாடி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் புரமோஷனுக்கு வருவதை அனுஷ்கா முழுவதுமாக தவிர்த்துவிட்டார். நேரில் வருவதற்கு அவர் ஏன் இவ்வளவு தயங்குகிறார் என்பது தெரியவில்லை. ஆனால், படம் குறித்து பத்திரிகையாளர்களுடன் தொலைபேசியில் மட்டும் பேசி பேட்டி கொடுத்துள்ளார். மேலும், நேற்று ரசிகர்களுடன் எக்ஸ் தளத்தில் சாட்டிங் செய்துள்ளார்.
அனுஷ்கா புரமோஷனுக்கு வராததை படக்குழுவும் குறையாக சொல்லவில்லை. படத்தின் இயக்குனர் கிரிஷ் கூட அது அனுஷ்காவின் விருப்பம் என்று சொல்லிவிட்டார். நேற்றைய எக்ஸ் சாட்டிங்கில் “படத்தின் கதையைக் கேட்டதும் பிரமித்துப் போய் விட்டேன். யெஸ் என்றோ, நோ என்றோ முதலில் சொல்லவில்லை,” என படம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்குப் பிறகு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடிப்பேன் என்றும் அனுஷ்கா தெரிவித்துள்ளார்.