பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
தெலுங்கு முன்னணி நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அந்தவகையில் மலையாள முன்னணி நடிகர் நிவின்பாலி பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதுதான் ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. இத்தனைக்கும் இதற்கு முன் நிவின்பாலி இப்படி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது இல்லை. தெலுங்கு படங்களிலும் கூட அவர் நடித்ததில்லை. ஆனால் இந்த முறை பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
அதிலும் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் நிவின்பாலியின் வாழ்த்துக்கு பதில் அளித்துள்ள பவன் கல்யாண், “உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி.. எப்பொழுதுமே நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு மிக ஆழமாக உயிர் கொடுப்பதை நான் பாராட்டுகிறேன். குறிப்பாக ஓம் சாந்தி ஒசானா மற்றும் பிரேமம் ஆகிய படங்கள்” என்று கூறியுள்ளார்.