பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் டொம்னிக் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படம் உலகளவில் 100 கோடி வசூலித்துள்ளது. அதையொட்டி படக்குழு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நன்றி தெரிவித்து வருகிறார்கள். சென்னையில் நடந்த விழாவில் நடிகர் துல்கர் பேசுகையில், ‛‛லோகா வெற்றி பெற்றது மகிழ்ச்சி. அடுத்து 5 அல்லது அதற்குமேல் பாகங்களாக இந்த படம் வரலாம். நல்ல படங்களுக்கு தமிழக ரசிகர்கள் தொடர்ச்சியாக ஆதரவு கொடுக்கிறார்கள். விரைவில் படக்குழுவுக்கு பரிசுகள் அளிக்க உள்ளேன். அப்பா மம்முட்டி நலமாக இருக்கிறார் என்றார்.
கல்யாணி பிரியதர்சன் பேசுகையில், "நான் ஆக்ஷன் படத்தில் நடிக்க போகிறேன் என்றவுடன் அப்பா பிரியதர்ஷன் கை கால் பத்திரம் என்றார். இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கவில்லை. சூர்யா, ஜோதிகா ஆகியோர் வீடியோ காலில் வாழ்த்தினார்கள். பல இடங்களில் இருந்து வாழ்த்து வந்துக்கொண்டே இருக்கிறது. ஒரு ஹீரோயின் ஓரியண்ட் படம் தென்னிந்தியாவில் 100 கோடி வசூலித்து இருப்பது இதே முதன் முறை என்கிறார்கள். அவ்வளவு மகிழ்ச்சி ஆக இருக்கிறது என்றார்.
ஹீரோ நஸ்லனும் தமிழக மக்களுக்கு நன்றி என்றார்.