தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் ‛மதராஸி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில், இந்த படம் கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 23 கோடி வசூலித்துள்ள நிலையில், உலக அளவில் 40 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், 125 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த மதராஸி படத்தின் சாட்டிலைட் 80 கோடிக்கும், ஆடியோ ரைட்ஸ் பத்து கோடிக்கும் ஏற்கனவே விற்பனையாகி இருந்தது. அந்த வகையில் இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே 90 கோடி விற்பனை ஆகிவிட்டது. தற்போது திரைக்கு வந்து 40 கோடி வசூலித்துள்ள நிலையில் மொத்தத்தில் இந்தப் படம் 130 கோடி வசூலித்துள்ளது. அந்த வகையில் இப்படம் எடுக்கப்பட்ட பட்ஜெட் தொகை விட கூடுதலாக 5 கோடி இதுவரை வசூலித்து இருக்கிறது. அதனால் இனிமேல் மதராஸி படம் வசூலிப்பதெல்லாம் லாபக் கணக்கில்தான் சேரும் என்பது தெரியவந்துள்ளது.