ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் பழைய திரைப்படப் பாடல்களை தங்களது படங்களில் சில இயக்குனர்களில் பயன்படுத்தி புதிய டிரென்ட் ஒன்றை உருவாக்கினார்கள். அவை படத்திற்கு பக்கபலமாகவும் அமைந்ததால் பலரும் அதைத் தொடர்ந்தார்கள்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், அஜித், த்ரிஷா நடித்து வெளிவந்த 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் இசையில் வந்த 'இளமை இதோ இதோ, ஒத்த ரூபாய் தாரேன், எஞ்சோடி மஞ்சக்குருவி' ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
தன்னிடம் முறையான அனுமதி பெறாமல் இப்பாடல்களைப் பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த மூன்று பாடல்களையும் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.
இதனிடையே, ஓடிடி தளத்தில் இடம் பெற்றுள்ள 'குட் பேட் அக்லி' படத்தில் இன்னும் அந்தப் பாடல்கள் நீக்கப்படவில்லை, அப்படியே இருக்கின்றன. அந்தப் பாடல்கள்தான் படத்தின் சிறப்பம்சமாக இருந்தது. தற்போது அந்தப் பாடல்கள் இல்லையென்றால் படத்தைப் பார்க்க முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது.