ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து, திருமணம் செய்தவர் நடிகை நயன்தாரா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்களின் திருமணத்தை வைத்து ‛நயன்தாரா : பியாண்ட் தி பேரி டேல்' என்ற ஆவணப்படம் உருவாகி, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் தனது ‛நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தி இருப்பதாக கூறி, ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே இதே ஆவணப்படத்தில் ‛சந்திரமுகி' படத்தின் காட்சிகளும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறி, அதற்கு தடை விதிக்க கோரி ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் அந்த காட்சிகளை நீக்க வேண்டியும், ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இதுபற்றி அக்., 6க்குள் பதில் மனு தாக்கல் செய்ய ‛டார்க் ஸ்டுடியோ' நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.