தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

விஷால் நடித்த 'ஆக்ஷன்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. தொடர்ந்து 'ஜகமே தந்திரம், கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி, பொன் ஒன்று கண்டேன், மாமன், தக் லைப்' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'கட்டா குஸ்தி 2' படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுவதாக தற்போது ஐஸ்வர்ய லட்சுமி பதிவிட்டுள்ளார்.
‛‛சமூகவலைதளம் என்னிடமிருந்த நிஜ சிந்தனையை பறித்தது. சொற்கள் மற்றும் மொழியை பாதித்தது, எளிய இன்பத்தையும் மகிழ்ச்சியற்றதாக மாற்றியது. வாழ்க்கையில் மேலும் அர்த்தமுள்ள தொடர்புகளையும் சினிமாவையும் உருவாக்குவேன் என்று நம்புகிறேன். நான் அர்த்தமுள்ள சினிமாவை உருவாக்க முடிந்தால் எனக்கு பழைய பாணியில் உங்களுடைய அன்பைக் கொடுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை அனுஷ்கா, சமூக வலைத்தளங்களிலிருந்து கொஞ்சம் இடைவெளி எடுக்கிறேன் என நேற்று பதிவிட்டிருந்தார். ஆனால், ஐஸ்வர்ய லட்சுமி மொத்தமாக விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.
இன்றைய யுகத்தில் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் அவர் எவ்வளவு காலம் விலகியிருப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.