வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… |

டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம் 250 கோடி வசூலைக் கடந்து ஓடி வருகிறது. மற்ற மொழிகளில் மட்டும் இப்படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் நடிகர் துல்கர் சல்மான், “19 நாட்களில் 50 கோடி ரூபாய் இந்திய மொத்த வசூல்! தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட பார்வையாளர்களின் இந்த அசாதாரண அன்புக்கு நன்றி. ஒவ்வொரு முறையும் நீங்கள் நல்ல திரைப்படங்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறீர்கள், அதுதான் இந்த பயணத்தை மிகவும் சிறப்பாக்குகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
'லோகா' படத்தின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என்பதற்காக தான் நடித்த 'காந்தா' படத்தின் வெளியீட்டையும் தள்ளி வைத்துள்ளார் துல்கர். கடந்த வாரம் செப்டம்பர் 12ம் தேதி இப்படம் வெளியாக வேண்டியது. ஆனால், தள்ளி வைத்துள்ளார்கள். தீபாவளிக்கு வருமா அல்லது இன்னும் தள்ளிப் போகுமா என்பது இனிமேல் தான் தெரிய வரும்.