ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! |

பழம்பெரும் கன்னட இயக்குனர் ஆர்.நாகேந்திர ராவ். கன்னடத்தில் முதல் பேசும் படத்தை இயக்கி, நடித்தவர். அவர் இயக்கி, தயாரித்த முக்கியமான படம்தான் 'ஜாதகம்'. இது ஒரே நேரத்தில் கன்னடத்தில் 'ஜாதகா பலா' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஜாதக பலம்' என்ற பெயரிலும் தயாரிக்கப்பட்டது. ஆர். கோவர்தனம் இசை அமைத்திருந்தார்.
ஆர். நாகேந்திர ராவுடன் டி.கே.பாலச்சந்திரன், ஆர். கோவர்தனம், கே. சாரங்கபாணி, நாகைய்யா, சூர்ய கலா, கே. என். கமலம், அங்கமுத்து, கே. ஆர். செல்லம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம் என்பார்கள். ஆனால், ஒரேயொரு பொய் எப்படி சிலரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்பதை ஜாதகப் பின்னணியில் இப்படம் சொன்னது.
கல்யாணமான மூன்று மாதத்தில் கல்யாணப் பெண் இறந்துவிடுவாள் என்று ஒரு ஜோதிடன் போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போக அதனால் அந்த பெண்ணும், அந்த குடும்பமும் எப்படிப்பட்ட பிரச்னைகளை சந்திக்கிறது என்பதுதான் படத்தின் கதை.