தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சென்னையில் நடந்த 'இரவின் விழிகள்' பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் சங்க செயலாளர் பேரரசு ஒரு முக்கியமான கருத்தை முன் வைத்தார். அவர் பேசுகையில், ''இன்று படங்கள் வெற்றி பெறுவது குறைந்துவிட்டது. சினிமாவை அழிப்பது சுயநலம்தான். சினிமா நல்லா இருக்கணும் என்று தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவரும் நினைக்கணும்.
சின்ன படங்கள் ஓடணும், புதுப்படங்கள் ஓடணும் என்ற விஷயத்தில் ரஜினிகாந்த்துக்கு ஒரு பார்வை உண்டு. அப்படிப்பட்ட படங்கள் ஓடினால், அந்த படக்குழுவை அழைத்து பாராட்டுகிறார் ரஜினிகாந்த். அவர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அந்த படம் ஓட உதவி செய்கிறார். இப்போது அல்ல, முன்பே அவருக்கு அந்த குணம் உண்டு. தனது பட வெற்றிவிழாவில் சேரன் இயக்கிய 'பொற்காலம்' படத்தை பாராட்டி, அவருக்கு செயின் போட்டார். அப்படிப்பட்ட உள்ளம் அவருக்கு உள்ளது.
அவரை போல முன்னணி ஹீரோக்கள் தங்களுக்கு பிடித்த நல்ல படங்களை பாராட்டலாம். அவர்களை நேரில் அழைத்து பாராட்டாவிட்டால், அந்த படம் குறித்து ஒரு பதிவு போடலாம். அது படத்தை ஓட வைக்கும். நாம் சம்பாதித்துவிட்டோம், நாம் வளர்ந்துவிட்டோம் என நினைக்காமல் நல்ல புதுப்படங்களுக்கு ஆதரவு கொடுத்து, அதை ஓட வைக்கலாம். இப்போது பல படங்கள் நன்றாக இருக்கிறது என்று ரிசல்ட் வருகிறது. ஆனால், வசூல் இல்லை. ஆகவே, சினிமாவை வாழ வைக்க இதை சேவையாக பெரிய ஹீரோக்கள் செய்யலாம்'' என்றார்.