கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

அரண்மனை 4 படத்திற்கு பிறகு தமிழில் தமன்னாவுக்கு புதிய படவாய்ப்புகள் இல்லை. அதேபோல் தெலுங்கிலும் ஒடேலா-2 படத்திற்கு பிறகு புதிய படங்கள் இல்லாத நிலையில் தற்போது ஹிந்தியில் ரோமியோ, ரேஞ்சர், விவன் உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார். தமன்னா அளித்துள்ள ஒரு பேட்டியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நான் நடித்தபோது எந்த படமும் என்னை பேச வைக்கவில்லை. ஆனால் அல்லு அர்ஜுன் நடித்த பத்ரிநாத் என்ற படத்தில் நடித்த பிறகு எனது நடனத்தை பார்த்து பல இயக்குனர்களும் சிறப்பு பாடல்களில் நடனமாட எனக்கு அழைப்பு விடுத்தார்கள். அப்படி தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடனமாடிய பாடல்கள் தான் என்னை பெரிய அளவில் பிரபலப்படுத்தி உள்ளன. அதனால் தொடர்ந்து சிறப்பு பாடல்களில் நடனம் ஆடுவதற்கு தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார் தமன்னா.