தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் திலகத்தின் வாரிசுகள் பிரபும், ராம்குமாரும். பிரபு சினிமாவில் அறிமுகமாகி 250 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். ஆனால் இன்னொரு வாரிசான ராம்குமார் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை.
ஆரம்பத்தில் நடிப்பு ஆர்வம் இல்லாத ராம்குமார் படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார். சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். 1986ம் ஆண்டு 'அறுவடை நாள்' என்ற படத்தை தயாரித்தார், இதனை தற்போது நடிகராக இருக்கும் ஜி.எம்.குமார் இயக்கினார். இதில் பிரபுவும், பல்லவியும் காதலர்களாக நடித்தனர். அவர்களுக்கு உதவும் கிறிஸ்தவ பாதிரியாராக ராம்குமார் நடித்தார்.
படம் வெற்றி பெற்ற போதும் ராம்குமாருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்றாலும் 'மைடியர் மார்த்தாண்டன்' உள்ளிட்ட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். ரஜினியின் 'சந்திரமுகி' படத்தில் வரும் ஒரு பாடலில் சில வினாடிகள் வந்துபோவார். ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்தில் வில்லனாக ரீ எண்ட்ரி ஆனார். அதன்பிறகும் பெரிய வாய்ப்புகள் இல்லை. சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தார்.